A documented record of action, leadership, and responsibility.
“திட்டங்கள் அல்ல, இவை தீர்வுகள்.”
Governance driven by resultsநீட் (NEET) தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, பெருமளவிலான தொண்டர்களுடன் கலந்துகொண்டேன்.

சேலம் இளைஞரணி மாநாட்டிற்காக, தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினேன்.

மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று, 'BAN-NEET' விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, மாபெரும் 'நீட் விலக்கு' கோரிக்கை கையெழுத்து இயக்கத்தை மிகச்சிறப்பாகச் செயல்படுத்தினேன்.




மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெற்ற இளைஞரணி நேர்காணல்களில் மாநில நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்றினேன்



சேலம் மாநாட்டின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி, தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வருகை தந்தபோது, பெருமளவில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வரவேற்றேன்.




சேலத்தில் நடைபெற்ற இரண்டாவது மாநில இளைஞரணி மாநாட்டின் மலர்க்குழு பணிகளுக்காக, மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களைச் சந்தித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.





முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பல்வேறு பள்ளிகளுக்கு மேஜைகள், இருக்கைகள், மின்விசிறிகள் மற்றும் குற்றாலம் ஸ்ரீ திருமலை குமரசுவாமி தேவஸ்தான மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குத் தேவையான ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கினேன்.



கழகத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினேன்.

தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, மேலகரம் பேரூராட்சி நன்னகரத்தில் எங்களது பெரும் முயற்சியால் மாணவர்களின் பயன்பாட்டிற்காகப் புதிய நூலகத்தை அமைத்துக் கொடுத்தேன்.

தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், தென்காசி ICI அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான விளையாட்டு ஆடைகளை வழங்கினேன்.



முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பெருமளவில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒருங்கிணைந்து கலந்துகொண்டேன்.




மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்கக் கழகத்திற்குப் பேச்சாளர்களை உருவாக்குவதற்கு, தென்காசி, கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களுக்குப் பேச்சுப் போட்டி விண்ணப்பங்களை வழங்கி, கழகத்தின் எதிர்காலத்திற்காகச் சிறந்த பேச்சாளர்களை உருவாக்குவதற்காகத் தீவிரமாகப் பணிகளை மேற்கொண்டேன்.

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், இளைஞரணியினரைத் திரட்டித் தலைமை ஏற்று நடத்தினேன்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு அநீதியை எதிர்த்துக் கழக இளைஞரணி அறிவித்த கண்டனப் பொதுக்கூட்டங்களைத் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் நடத்தினேன்.



பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நெடுவயல் அரசு பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை வழங்கினேன்.

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்திய மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் சார்பில் பங்கேற்று ஆதரவை வெளிப்படுத்தினேன்.


திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை ஒன்றிய, நகர மற்றும் பேரூர் வாரியாகக் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைத்து நடத்தினேன்.

2023 டிசம்பர் பெருவெள்ளப் பாதிப்பின் போது, மாவட்ட இளைஞரணி சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினேன்.




குற்றாலநாதர் கோவில் வளாகத்தில் இரவில் திடீரென்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவியாக, நள்ளிரவு முதல் இளைஞரணியைத் திரட்டிப் பெரிய பாதிப்பு ஏற்படாமல் உதவியாக இருந்தோம்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கோயம்புத்தூர் மேற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதியில் வார்டு மற்றும் கிளை வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மேற்கொண்டேன்.



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிகளில் வார்டு/கிளை வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தேன்.


திருவண்ணாமலையில் நடைபெற்ற மண்டல மாநாட்டிற்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளையும் பெருமளவில் திரட்டி அழைத்துச் சென்றேன்.


